Tuesday, May 14, 2024
HomeTech Articlesஆல்பபெட் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை - ஆனால்...

ஆல்பபெட் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை – ஆனால்…

ஆல்பபெட் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை

Sundar Pichai

இதுவரைக்கும் எந்த நிறுவனத்தை துவங்கிய அமெரிக்கர்களும் ஒரு இந்தியருக்காக தங்களது தலைமைப் பொறுப்பை விட்டுத்தந்ததில்லை. முதல் முறையாக சுந்தர் பிச்சை எனும் இந்தியருக்காக இரு அமெரிக்கர்கள் தங்களது பதவியை துறந்துள்ளார்கள் – பெருமை

ஆல்பபெட் – கூகுள்

பெரும்பான்மையானவர்களுக்கு கூகுள் என்கிற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தை பற்றி மட்டுமே தெரிந்திருக்கும். திடீரென கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டுவந்த சுந்தர் பிச்சை அவர்கள் ஆல்பபெட் எனும் நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்படுகிறார் என்றவுடன் அது ஏதோ வேறொரு நிறுவனம் போல என எண்ணிக்கொண்டனர். ஆனால் கூகுள் என்பது ஆல்பபெட் எனும் நிறுவனத்திற்கு கீழே செயல்படுகிற துணை நிறுவனம் தான்.

கூகுள் நிறுவனம் போன்ற லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் பல சிறிய நிறுவனங்களையும் நடத்த துவங்கினார்கள். அவற்றில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட அடங்கும். அப்படிப்பட்ட சிறிய நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்தோடு குழம்பிக்கொள்ளக்கூடாது என்பதற்காக ஆல்பபெட் புதிய தலைமை நிறுவனத்தை உருவாக்கி அதன் கீழாக கூகுள் நிறுவனத்தையும் மற்ற நிறுவனங்களையும் கொண்டு வந்தனர். 2015 ஆம் ஆண்டுதான் ஆல்பபெட் உருவாக்கப்பட்டது. அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சுந்தர் பிச்சை அவர்களைத்தான் ஒட்டுமொத்த கம்பெனிகளுக்குமான தலைமை செயல் அதிகாரியாக, அதாவது ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல்  அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த சுந்தர் பிச்சை?

ஆல்பபெட் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை

நிச்சயமாக ஒரு சிறந்த தொழில்நுட்ப அறிவாளியாகத்தான் இருக்க முடியும். ஆகையினால் தான் அவர் இத்தனை பெரிய பதவிக்கு வந்திருக்கிறார். ஆனால் ஒரு நிறுவனத்தை துவங்கிய நிறுவனர்கள் தங்களது பொறுப்பை இன்னொருவரிடம் நம்பிக்கையோடு ஒப்படைக்கிறார்கள் என்றால் அந்த நபர் ஒரு அறிவாளியாக மட்டுமே இருந்தால் போதுமானது அல்ல அதனையும் தாண்டி சிறப்பியல்பு கொண்டவராக இருந்தே தீர வேண்டும் அல்லவா.

இதற்க்கு சுந்தர் பிச்சையுடன் நெருக்கமாக பணியாற்றிய ராஜன் ஆனந்தன் காரணம் கூறுகிறார்.  சிறந்த தொலைநோக்கு பார்வை, அணிகளை கட்டமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் ஆழ்ந்த பணிவு – இவை அனைத்தும் ஒருங்கே பெற்ற தலைவர் சுந்தர் பிச்சை. மிகவும் எளிமையாக அனைவருடனும் கருத்து பரிமாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட சுந்தர் பிச்சை இதுவரை எந்த தருணத்திலும் நொடிந்து போய் கவலையுடன் இருந்து நான் பார்த்ததே இல்லை”  என கூறுகிறார் ராஜன் ஆனந்தன்.

பெரும் வரவேற்பை பெற்ற கூகுள் குரோம் பிரவுசரை உருவாக்கிய சுந்தர் பிச்சை தனது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடுகளினால் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்து நம்மை பெருமைப்படுத்தி இருக்கிறார். சுந்தர் பிச்சை எப்போதுமே சொல்வதுண்டாம் “இந்தியாவில் ஒரு பொருள் வரவேற்பை பெற்றுவிட்டால் உலகம் முழுமைக்கும் வரவேற்பை பெற்றுவிடும்”. சுந்தர் பிச்சை அவர்கள் தமிழர் என்பதனால் பெருமை கொள்ளுங்கள். அதனையும் தாண்டி அவரை முன் மாதிரியாகக்கொண்டு ஒவ்வொரும் முன்னேற முயற்சி செய்திடுங்கள்.

Dark Mode

புரிதலுக்காக, ஆல்பபெட் எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதற்காக என்னவேண்டுமானாலும் சுந்தர் பிச்சையால் செய்துவிட முடியுமா என்றால் அது முடியாது. சுந்தர் பிச்சை அவர்களுக்கும் முக்கிய பொறுப்பு இருக்கிறது என்பதனை நாம் மறுக்கவில்லை. ஆனால் ஆல்பபெட் நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை வைத்திருக்கும் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்துதான் அங்கே நடக்கும் இதனையும் நாம் மறக்க கூடாது.

இதனை அவர்கள் தெளிவாக கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தில் தினசரி ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டது மிகப்பெரிய பாக்கியமாக இருந்தாலும் ஒரு பெற்றோர் போன்று நல்ல ஆலோசனைகளையும் அன்பையும் வழங்குகிற இடத்திற்கு தற்போது வந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம், தினசரி தொந்தரவாக அது இருக்காது என குறிப்பிட்டுள்ளனர். இதற்கு அர்த்தம் நாங்கள் ஆலோசனைகளை வழங்குவோம், வழிநடத்துவோம் ஆனால் தொந்தரவு செய்யமாட்டோம் என்பது தான்.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular