Monday, May 20, 2024
HomeTech ArticlesBarsha Water Pump : No electricity needed for this hydro powered water...

Barsha Water Pump : No electricity needed for this hydro powered water pump

 


பார்சா பம்ப் [Barsha Water Pump] என்பது மின்சாரம் அல்லது மனித ஆற்றல் ஏதுமின்றி புதிதாக வடிமைக்கப்பட்டுள்ள நீர் இறைப்பான் . ஆறு போன்ற நீர் ஓடக்கூடிய இடத்தில் பார்சா பம்ப் வைக்கும் போது அதிலிருந்து பெறப்படும் அழுத்தத்தின் உதவியினால் நீர் உறிஞ்சப்பட்டு உயரமான இடங்களுக்கு பாய்ச்சலாம் .
விவசாயத்துறையில் மிகப்பெரிய பயனுள்ள சாதனமாக இந்த பம்ப் இருக்கும் என கருதப்படுகிறது . இது எப்படி இயங்குகிறது என பார்ப்போமா?

 


How Barsha Pump works?

 


பார்சா என்பதற்கு நேபாள மொழியில் மழை என்று பொருள் . படத்தில் காட்டப்பட்டுள்ளது தான் பார்சா பம்ப் . இதனை நான்கு பேரால் கூட தூக்கி செல்ல முடியும் . அதன் அடிப்பாகம் நிரந்தரமானது , அதன் மேல் சுழலக்கூடிய ஒரு அமைப்பு இருக்கின்றது . தண்ணீர் செல்லும் திசைக்கு எதிர் திசையில் இதனை வைக்கும் போது தண்ணீர், சுழலும் அமைப்பினை சுழற்றும் . அப்போது ஏற்படுகின்ற அழுத்தத்தினால் சுழலும் அமைப்பினுள் அமைக்கப்பட்டு இருக்கின்ற ஸ்பைரல் போன்ற அமைப்பினுள் அழுத்தம் ஏற்படும் .

 

இந்த அழுத்தம் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதற்கான போதுமான ஆற்றலை தருகின்றது . இந்த ஆற்றல் உறிஞ்சப்படும் நீரினை 20 மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு போதுமானதாக இருக்கின்றது .

 


 

Why Barsha Pump is needed now?

 

Barsha pump kept on river side and it pumps water by hydro power
Barsha pump kept on river side and it pumps water by hydro power



மக்கள் தொகை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டு இருக்கின்றது . இன்னும் இருபது ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரிப்பினால் உணவிற்கான தேவை அதிகரிக்கும் , அதேசமயம் அதிகரிக்கும் குடியிருப்புகளினால் விவசாயம் செய்வதற்கான இடப்பற்றாக்குறையும் ஏற்படும் . அப்போது கிடைக்கின்ற இடங்களில் விவசாயம் செய்யவேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் . அப்போது அதிகபடியான தேவையாக நீரும் அதனை எடுப்பதற்கான மின்சாரமும் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள் .

 

அப்படிப்பட்ட சூழலில் மின்சாரம் தேவைப்படாத நீர் இறைக்கும் பம்புகள் அத்தியாவசியமானதாக இருக்கும் . அப்படிப்பட்ட ஒன்றுதான் பார்சா பம்ப்.

 


How Barsha Pump helped people over the past one year?

 

ஓராண்டிற்கும் முன்பாகவே பார்சா பம்ப் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது . அதனை பயன்படுத்திய விவசாயிகள் , தினந்தோரும் வாளிகளின் மூலமாக தண்ணீர் கொண்டுவந்து ஊற்றுவதற்காகவே 6 மணி நேரம் கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும் . இப்போது எங்களது நேரம் மிச்சமாகியிருக்கிறது , உழைப்பு மிச்சமாகியிருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்கள் .

 


TECH TAMILAN 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular