Sunday, October 6, 2024
HomeTech Articlesதிடீரென முளைத்த உலோகத் தூண், வைத்தது மனிதர்களா? வேற்றுகிரக வாசிகளா? | monoliths

திடீரென முளைத்த உலோகத் தூண், வைத்தது மனிதர்களா? வேற்றுகிரக வாசிகளா? | monoliths

Metal Monoliths

கடந்த வாரங்களில் பல்வேறு நாடுகளில் திடீரென உலோகத் தூண் ஒன்று தோன்றியது. பின்னர் அது தானாக மறைந்தும் போனது. இது வேற்றுக்கிரகவாசிகளின் செயல் என சிலர் சொல்லிக்கொண்டிருக்கும் சூழலில் மனிதர்கள்களின் செயல் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. உலோகத் தூண் வைத்தது மனிதர்களா? வேற்றுகிரக வாசிகளா? வாருங்கள் அலசுவோம்.


https://youtu.be/VJYrR3N3v5Y

மனிதர்களின் நடமாட்டமில்லா அமெரிக்காவின் யூட்டா என்ற பகுதியில் வன ஆடுகளின் கணக்கெடுப்பை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்து மேற்கொண்டிருந்தார்கள். அப்போது தரையில் பாறைகள் உள்ள பகுதியில் பளபளவென ஒரு பொருள் மின்னுவதைக்கண்டு அவர்கள் அருகே சென்று பார்த்தபோது தான் உலோகத்தூண் ஒன்று திடீரென நடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்தத்தூண் செயற்கையாக நடப்பட்டதற்கான எந்தவித தடயமும் இல்லாமல் நடப்பட்டு இருந்தது. முக்கோண வடிவத்திலான உலோகத்தூணை தரையில் அதே வடிவத்தில் குழி தோண்டி புதைத்திருப்பது போன்று துல்லியமாக புதைக்கப்பட்டு இருந்தது. 

 

வாகனங்கள் வந்துபோக முடியாத கரடுமுரடான அந்த இடத்தில் மனிதர்கள் எதற்காக இப்படி ஒரு தூணை வைக்க வேண்டும். ஆகவே தான் இது வேற்றுகிரகவாசிகள் வேலையாக இருக்குமென ஆரூடம் சொல்லப்பட்டது. இந்த உலோகத்தூண் பற்றிய புகைப்படம் மற்றும் வீடியோவை  கண்ட பலரும் இது வேற்றுகிரகவாசிகளின் வேலை தான் என சமூக வலைதளங்களில் எழுதித்தள்ளினார்கள். இவர்களுக்கு உதவுவது போலவே சில நாட்களுக்கு பிறகு அந்தத்தூண் காணாமல் போனது. 

 

அமெரிக்காவில் முதலில் தோன்றி மறைந்த இந்த திடீர் உலோகத்தூண் தொடர்ந்து பிரிட்டன், ருமேனியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் தோன்றியது. பின்னர் தானாகவே மறைந்தும் போனது என்று செய்தி வெளியானது. 

உலோகத் தூண் வைத்தது வேற்றுகிரகவாசிகளா?

உலோகத்தூண் மிகவும் நேர்த்தியாக நடப்பட்டு இருந்தது மற்றும் திடீரென காணாமல் போனது ஆகிய இரண்டு விசயங்களும் தான் உலோகத்தூணை வைத்தது வேற்றுக்கிரகவாசிகளா என்ற சந்தேகத்தை உருவாக்க காரணமாக அமைந்தன. ஆனால் உண்மையைக்கண்டறியும் குழுக்களை சேர்ந்த பலரும், இது மனிதர்களின் திட்டமிட்ட செயல்தான் என அடித்துக்கூறுகிறார்கள். அதற்கு அவர்கள் வைக்கும் காரணங்கள் சரியானவையாக இருக்கின்றன. 

 

அகற்றியவர்கள் மனிதர்களே : 

 

இதுவரைக்கும் இந்தத்தூண்கள் தானாகவே மறைந்து போயின என்றே சொல்லப்பட்டது. ஆனால் இந்தத்தூண்களை மனிதர்கள் அகற்றியதாகவும் தான் அப்போது அங்கே இருந்ததாகவும் கூறுகிறார் ராஸ் பெர்னார்டு எனும் புகைப்பட கலைஞர். அவர் இதுபற்றிய புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

 

View this post on Instagram

A post shared by Ross Bernards (@rossbernards)

பிராங்க் செய்திட மனிதர்கள் செய்த வேலை : 

பிராங்க் செய்திட விரும்பும் சில குழுக்கள் இப்படி திட்டமிட்ட வேலைகளில் அடிக்கடி ஈடுபடுவது உண்டு. அப்படி எவரேனும் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம். மேலும், இதுபோன்றதொரு உலோகத்தூண்கள் உருவாகும்  காட்சி 2001: A Space Odyssey என்ற திரைப்படத்தில் வரும. ஆகவே அதன் ரசிகர்கள் கூட இப்படி செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

ஏலியன்ஸ் எதற்காக செய்திட வேண்டும்? 

சில தினங்களுக்கு முன்பு, ஏலியன்ஸ் இருப்பது உண்மைதான். அவர்கள் இருப்பது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியும் என்றும் ஏலியன்ஸ் தங்களது இருப்பை தற்போது காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்றும் இஸ்ரேலிய முன்னால் விண்வெளி பாதுகாப்புத்துறை ஜெனெரல் தெரிவித்து இருந்தார். அப்படி இருக்கும் போது வெட்ட வெளிச்சமாக மனிதர்கள் கண்களில் படும்படி மீண்டும் மீண்டும் தூண்களை வைத்து எடுப்பார்களா? 

இந்தக் காரணங்கள் அனைத்தும் மனிதர்கள் தான் இந்த வேலையை செய்திருக்கிறார்கள் என்பதனை மிகத்தெளிவாக காட்டுகிறது. 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular