Site icon Tech Tamilan

WhatsApp ஐ தவறாக பயன்படுத்தும் இந்திய கட்சிகள்


கிட்டத்தட்ட 1.5 பில்லியன் பயனாளர்களை கொண்டிருக்கிற WhatsApp ஆப்பினை இந்திய அரசியல் கட்சிகள் “அரசியல் பிரச்சாரங்களை மேற்கொள்ள” தவறாக பயன்படுத்துகின்றன. அதனை முடிந்த அளவு தடுக்க முயன்று வருவதாகவும் இதனை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசியல் கட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அதன் Executive தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் பலவற்றில் நடக்கின்ற தேர்தலில் சமூக வலைத்தளங்கள் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அரசியல் கட்சிகள் அந்த மாற்றத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தவறான செயலாக கருதப்படுகிறது. தங்களுக்கு சாதகமான செய்திகளை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்வது, எதிர்கட்சிகளை குறித்த தவறான செய்திகளை பரப்புவது, அப்ளிகேஷன்களை பயன்படுத்தி அதிகப்படியான நபர்களுக்கு அனுப்புவது போன்றவை சில உதாரணங்கள்.

——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

ஏற்கனவே WhatsApp , facebook போன்றவற்றில் பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். இந்த சூழலில் தான் WhatsApp நிறுவனம் இப்படியொரு விசயம் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துள்ளது. இருந்தாலும் எந்த கட்சி இப்படிப்பட்ட நிகழ்வுகளில் அதிகமாக ஈடுபடுகின்றன என்பது குறித்து எந்த தகவலையும் கூறவில்லை.

WhatsApp இன் இந்த குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டுமே மறுத்துள்ளன.

——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–


இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.

TECH TAMILAN


இதையும் படிங்க,

உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி ...
அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து ...
இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான ...
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் ...
நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான் ...
நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது ...
உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான ...
இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு ...
நமது இந்தியாவில் வெளிநாட்டு உணவுகள் மற்றும் கடைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதன் வெளிப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காண முடிகிறது. இதனால் தான் ...
ஒரு நல்ல நாள் என்பது பலருக்கு நல்ல தேநீர் (tea) உடன் தான் துவங்குகிறது. ஆகவே தான் நாம் வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஏகப்பட்ட டீ ...
Exit mobile version