Site icon Tech Tamilan

10YearChallenge நம்மை கண்காணிப்பதற்காகவா? Facebook Facial Recognition AI Explained in tamil


சில தினங்களுக்கு முன்பாக #10YearChallenge சமூக வலைதளங்களில் பிரபலமானது . இந்த சேலஞ்ச் படி இப்போதுள்ள புகைப்படத்தையும் 10 வருடத்திற்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் பதிவேற்ற வேண்டும் . ஏன் எதற்காக என ஆராயாமல் நம் மக்களும் நான் அப்போது அப்படியிருந்தேன் இப்போது இப்படியிருக்கிறேன் என புகைப்படங்களை பதிவேற்றினார்கள் .இன்ஸ்டாகிராமில் துவங்கிய இந்த சேலஞ்ச் facebook , twitter , WhatsApp status என நீண்டது . இதற்கு முன்பாக பக்கெட் சேலன்ச் , Falling Down சேலன்ச் என பல சேலஞ்சுகள் நடைபெற்றுவந்தன .

ஆனால் தற்போதைய சேலஞ்சில் facebook நிறுவனத்தின் சதி இருப்பதாகவும் தங்களுடைய முகங்களை கண்காணிக்கும் Face Recognition AI ஐ மெருகேற்றுவதற்காகவே இந்த சேலஞ்சை பிரபலப்படுத்தி விட்டிருக்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது .


> Facebook தான் இந்த சேலஞ்சை துவங்கிவிட்டதா ?

> நாம் அப்லோட் செய்கின்ற போட்டாவை கண்காணிப்பதாக சொல்வது உண்மையா ?


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

Facebook Face Recognition AI

 

நாம் profile போட்டோவை வைக்கும் போது facebook நிறுவனத்தின் Face Recognition AI மூலமாக நமது முகம் ஸ்கேன் செய்யப்படும் . இது உண்மை . ஆகையினால் தான் நாம் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை அப்லோட் செய்யும்போது tag ஆப்சனில் அவர்களுடைய பெயர் வருகின்றது .


 

10YearChallenge ஐ யார் துவங்கியது?

இந்த சேலஞ்சை பலரும் facebook தான் துவங்கியது என்றும் தங்களுடைய AI இன் படிப்பறிவை(learning) மேம்படுத்திடவே இவ்வாறு செய்கிறார்கள் எனவும் கூறினார்கள் .

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள facebook நிறுவனம் நாங்கள் இந்த 10YearChallenge சேலஞ்சை அறிமுகப்படுத்தவில்லை எனவும் இன்ஸ்டாகிராமில் தனிநபர் ஒருவரால் துவங்கப்பட்டது பின்நாளில் பிரபலமடைந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளது.


 

நமது புகைப்படத்தை கண்காணிக்கிறதா Facebook?

முகத்தை ஸ்கேன் செய்யும் AI

 

நாம் facebook இல் அப்லோட் செய்கின்ற ஒவ்வொரு போட்டோவையும் facebook ஸ்கேன் செய்துகொண்டுதான் இருக்கின்றது . இப்போது நாம் பகிர்ந்துகொள்கின்ற 10 வருட சேலன்ச் போட்டாவை வைத்துதான் நமது முக பாவங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை . நாம் தான் ஏற்கனவே வருடந்தோறும் புகைப்படங்களை அப்லோட் செய்துகொண்டே இருக்கிறோமே .அதையெல்லாம் செய்துவிட்டு இப்போது இந்த சேலஞ்சிற்கு அஞ்சுவது வீடு பற்றியெரியும் போது சூடத்தினால் உருவான நெருப்பிற்கு அஞ்சுவதை போன்றது .


நமது போட்டோவை ஸ்கேன் செய்வதை தடுக்க முடியுமா?

 

Settings > Privacy > Face Recognition > NO

உங்களது facebook இன் settings பகுதிக்குள் சென்று Face Recognition ஆப்சனை NO என வைப்பதன் மூலமாக பிறரோ நீங்களோ புகைப்படத்தை அப்லோட் செய்யும்போது உங்களுடைய profile போட்டோவுடன் ஒப்பீடு செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆனால் facebook இன் AI ஸ்கேன் செய்து தன்னகத்தே தகவலை வைத்துக்கொள்ளுமா என்பது போன்ற சரியான தகவல் இல்லை .

மூன்றாம் நிறுவனத்திடம் நமது தகவல் இருக்கும்போது கண்காணிக்காமல் இருக்கமாட்டார்கள் என நம்ப இயலவில்லை .

இதுபோன்ற தகவல்களை தமிழில் படித்து தெரிந்துகொள்ள subscribe செய்யுங்கள் .

 


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–


உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி ...
அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து ...
இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான ...
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் ...
நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான் ...
நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது ...
உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான ...
இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு ...
நமது இந்தியாவில் வெளிநாட்டு உணவுகள் மற்றும் கடைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதன் வெளிப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காண முடிகிறது. இதனால் தான் ...
ஒரு நல்ல நாள் என்பது பலருக்கு நல்ல தேநீர் (tea) உடன் தான் துவங்குகிறது. ஆகவே தான் நாம் வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஏகப்பட்ட டீ ...

TECH TAMILAN

Exit mobile version